Monday, October 30, 2006

புளு கிராஸ் அமைப்பு மனிதர் மீதும் பாசம் வைக்கட்டும்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் அமைந்திருப்பது கட்டப்பெட்டு கிராமம். இங்கு நாகராஜ் என்ற ஏழு வயது சிறுவன் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன் தினம் பள்ளிக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த நாகராஜ் மீது இருபதுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் தாக்குதல் தொடுத்து இருக்கின்றன. பயத்தால் இரு கை-கால்களையும் மடக்கி குன்றித் தரையில் மடிந்து கொண்ட இச்சிறுவனை தலை முதல் கால் வரை கடித்து குதறியிருக்கின்றன. துடித்து கதறியிருக்கிறான் சிறுவன். அவனது கதறலைக் கேட்ட பொதுமக்கள் ஒன்று கூடி கல்லால் அடித்தும், பெருஞ்சப்தம் எழுப்பியும் நாய்களை விரட்டியடித்திருக்கின்றனர்.



தனியார் மருத்துமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள இச்சிறுவனுக்கு இதுவரை உடலில் 400 தையல்கள் போடப்பட்டுள்ளன. அதிகளவில் சிறிய காயங்களும் உள்ளன என்றும் அவற்றுக்கு இன்னும் 200 தையல்கள் வரை போட வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காயங்களில் வைரஸ் கிருமிகள் அதிகளவில் உள்ளதால் அவற்றை அழித்துவிட்டு பிறகு தையல் போடும் வேலையில் மருத்துவர்கள் ஈடுபட்டு உள்ளனர். குன்னூரில் மழைக்காலத்து கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் சிறுவனுக்கு ஜன்னி ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்கு கண்கானிப்பை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.

இந்தப் பகுதிகளில் தெரு நாய்களின் தொந்தரவு சமீப காலங்களில் அதிகமாக உள்ளது என மக்கள் தெரிவிக்கிறார்கள். நாளொன்றுக்கு 2 முதல் 3 போர் வரை நாய்கடிக்கு ஆளாகின்றனர். அதாவது மாதமொன்றுக்கு சராசரியாக 60 முதல் 90 போர் வரை. கடந்த வாரமும் கூட ஒரு மருத்துவர் மீது இந்நாய்கள் பாய்ந்ததில் கை கால்கள் என பல இடங்களில் கடி வாங்கியிருக்கிறார்.

நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த அவற்றுக்கு நகராட்சியினால் ரூபாய் ஒன்றரை லட்சம் செலவில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அந்த நாய்களே மீண்டும் குட்டி போட்டு பல்கிப் பெருகி உள்ளன. எனில், இதில் ஏதோ முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது.




இந்த தெருநாய்களை எப்படியாவது ஒழித்து தங்களை காத்தளிக்கும்படி மன்றாடி வருகின்றனர் இப்பகுதி மக்கள். மயக்க ஊசி போட்டு நாய்களை கொல்ல முயற்சி எடுத்த நகராட்சியை கடும் எதிர்ப்பு தெரிவித்து தடுத்தது புளு கிராஸ் அமைப்பு.

புளு கிராஸ் அமைப்பின் செயல்பாடுகளில் எள்முனை அளவிற்கும் அதிருப்தியிலை நமக்கு , அதன் மகத்தான சேவையினை உண்மையிலேயே பலமுறை வியந்து பாராட்டி இருக்கிறேன். ஒரு முறை விபத்தொன்றில் சிக்கிய தெரு நாய்குட்டியினை பார்த்து பதறிப்போய் புளு கிராஸ் அமைப்பிற்கு தொலைபேசித் தகவல் தெரிவித்ததில், சடுதியில் ஆம்புலன்ஸ் வண்டியில் வந்து நாயை எடுத்துச் சென்று சிகிச்சை அளித்து பின்னர் ஒரு மாதங்கழித்து அதே இடத்தில் கொண்டு வந்து விட்டுச் சென்றனர். இதனை கண்ட இப்பகுதி மக்கள் அது முதல் எங்கள் பகுதியில் நாய், பூனை இவைகள் எங்கு துன்பத்தில் சிக்கினாலும், உடனே என்னிடம் வந்து தகவல் தெரிவிப்பார்கள். நானும் புளு கிராஸ் அமைப்பினை தொடர்பு கொண்டு தகவலை தெரிவிப்பேன். இது போன்ற நேரங்களில் புளு கிராஸ் அமைப்பின் மேலான சேவை பாராட்டுக்குரியது.

ஆனால் தற்போது நீலகிரி மாவட்ட விஷயத்தில் தீர்வு என்னவாய் இருக்க முடியும்? அவற்றுக்கு மீண்டும் 'தரமுள்ள' கருத்தடை செய்யலாம் தான். இப்போது இருக்கும் நாய்களை என செய்வது? கட்டுக்கடங்காமல் சென்று விட்ட நாய்க்கூட்டத்தினமிருந்து பொது மக்களையும், குழந்தைகளையும் எங்ஙணம் காப்பது? ஊசி போட்டு அவைகளை கொன்றழிப்பதில் புளு கிராஸ் அமைப்பிற்கு உடன்பாடில்லாமல் போனால், அந்நாய்க்கூட்டத்தினை கவர்ந்து சென்று ஓரிடத்தில் வைத்து அவர்களே பராமரித்துக் கொள்ளட்டும். அல்லது உரிய தீர்வினை அவர்களையே முன்வைக்கச் சொல்லலாம்.

இப்பதிவினை கண்ணுறும் சகோதர சகோதரிகள் பலரும் பல நாடுகளில் உள்ளீர்கள். உங்கள் பகுதி அனுபவத்திலுள்ள அல்லது உங்களுக்கு தோன்றும் தீர்வினை முன்வையுங்கள். இந்த பிரச்சனை நீலகிரியில் மட்டுமல்ல நம் நாட்டில் அநேக இடங்களில் உள்ளன.

இப்போதைக்கு நீலகிரி பகுதிக்கு எனக்கு தோன்றும் தீர்வு -- நாய்களை ஊசி போட்டு கொல்வது மட்டும் தான். வேறு வழியில்லை. தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் பல பேர் பாதிக்கப்படுவர். தாமதம் கூடாது. கொல்லுங்கள் நாய்களை -- காப்பாற்றுங்கள் மக்களை.

புளு கிராஸ் அமைப்பினரே! நாய்கள் மீது வைத்திருக்கும் அன்பில் சிறிதளவு மனிதர் மீதும் வையுங்கள். 400 தையல் வாங்கிய அந்த சின்னஞ்சிறு பாலகனின் அலறல் சப்தம் இன்னுமா தங்களது செவிப்பறையில் வந்து மோதவில்லை ?????

Friday, October 27, 2006

இன்னுயிர் தந்து அரசை எழுப்பிய குழந்தை நந்தினி

நந்தினி என்ற அந்தப் பிஞ்சுக் குழந்தை தனது உயிரை விலையாகக் கொடுத்து அரசாங்கத்தை விழித்து எழச் செய்துள்ளது.

தொடக்க கல்வித்துறை விரைவில் வெளியிட உள்ள புதிய உத்தரவில் இடம் பெற உள்ள முக்கிய அம்சங்கள் ஆவன:

# நர்சரி மற்றும் ஆரம்பப்பள்ளிகள், சிறுவர்-சிறுமிகளை சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு முன்னதாக, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரிடமோ அல்லது உதவி தொடக்கக் கல்வி அலுவலரிடமோ கட்டாயம் முன் அனுமதி பெற வேண்டும்.

# பள்ளியின் பெயர், சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படும் சிறுவர், சிறுமிகள் பற்றிய விவரம் சுற்றுலா செல்லும் இடங்கள் சிறுவர்களுடன் செல்லும் ஆசிரியர்களைப் பற்றிய விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய மனுவை, அதிகாரிகளிடம் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்.

# அதற்கு கல்வித்துறை அலுவலர் அனுமதி அளித்தால் மட்டுமே குழந்தைகளை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல முடியும். அனுமதி மறுத்தால் சுற்றுலா செல்லக் கூடாது. அப்படி மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

# அதன்படி, தினமும் ஒரு ஆசிரியர் பள்ளி வளாகத்தைச் சுற்றி பார்வையிட்டு, வளாகத்தில் உள்ள குறைகளை தனி பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். குறைகளில் உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டியவற்றை உடனே நிறைவேற்ற வேண்டும். கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும் போது, மேற்கண்ட பதிவேடுகளைக் காட்ட வேண்டும்.

இந்த உத்தரவுகள் விரைவில் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட உள்ளன, என இன்றைய தினமலர் செய்தித்தாளில் கூறப்பட்டுள்ளது.

வழக்கம் போல 'கடுமை' உத்தரவோடு மட்டும் நின்றுவிடாமல் அதை செயல்படுத்துவதிலும் தொடரவேண்டும்.

அதோடு மட்டுமல்லாமல், ஆரம்பப்பள்ளிக் குழந்தைகளின் போக்குவரத்திற்கான ஏற்பாடுகளை பள்ளிகள் கட்டாயம் செய்தாக வேண்டும். கட்டணத்தை அரசாங்கமே நிர்ணயம் செய்யவேண்டும். அதை மீறி அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது மாநகர போக்குவரத்துக் கழகம் "மகளிர் மற்றும் சிறுவர்களுக்கென தனிப்பட்ட சேவைப் பேருந்துகளை அங்கொன்றும் எங்கொன்றுமாக ஏதோ பெயரளவில் இயக்குகிறது.

பள்ளி ஆரம்பிக்கும் மற்றும் முடியும் நேரங்களில் அதிகளவு பேருந்துகளை "பள்ளி மாணவர்களுக்கு" மட்டும் என இயக்க வேண்டும். பேருந்து நடத்துனருக்கு குறிப்பாக பள்ளி மாணவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற நடத்தை நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.

பள்ளிகளின் நிர்வாகக் குறைபாடு மற்றும் விதிமுறை மீறல் ஆகியவற்றின் மீதான வழக்குகளுக்கு மிகுந்த முன்னுரிமை கொடுத்து விரைவில் தண்டனை வழங்க வேண்டும். நீதிமன்றம் மனது வைத்தால் இதைச் செய்ய முடியும். சமீபத்தில் கொலை வழக்குகளுக்கு பல்வேறு நீதிமன்றங்கள் பதினைந்து நாள், பத்து நாள், இரண்டு நாள், ஏன் -- ஐந்து மணிநேரத்தில் தீர்ப்பளித்து 'சாதனை' படைத்ததாக செய்திகள் வருகின்றன. கும்பகோணம் தீ விபத்து பற்றிய வழக்கு நேற்றைக்கு கூட விசாரணைக்கு வந்து மீண்டும் 'தள்ளிவைக்கப்பட்டுள்ளது'. ஆண்டுகள் இரண்டு கடந்து போய்விட்டன.


நந்தினி, இனி இது போன்ற மரணம் ஒரே ஒரு குழந்தைக்கும் நேராது பார்த்துக் கொள்வோம் மகளே!

Thursday, October 19, 2006

இதோ மற்றொரு குழந்தை நமது வன்முறைக்கு பலியாகிவிட்டது


இதோ மற்றொரு குழந்தை நமது வன்முறைக்கு பலியாகிவிட்டது.

நான் சொல்ல வருவது, திங்கள் அன்று சென்னை அண்ணா நகர் குட்டையில் விழுந்து D.A.V. பள்ளியைச் சேர்ந்த குழந்தை மரணமடைந்த பெருந்துயர சம்பவத்தைதான்.

கோபாலபுரத்தில் அமைந்த D.A.V. பள்ளியில் சேர்க்கை கிடைப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. முதல் நாள் இரவே நெடிய வரிசையில் நின்று
விண்ணப்பம் வாங்கி, சிபாரிசு செய்ய உயர்ந்த மனிதர்களை பிடித்து, சில பத்தாயிரங்களை கொட்டிக் கொடுத்து அழுத பின்னர் மட்டுமே ஒரு குழந்தை அந்த பள்ளியில் கால் வைக்க முடியும்.

நினைத்து பாருங்கள், அதன் பெற்றோர் எத்தனை வண்ணக் கனவுகளில் மிதந்து கொண்டிருப்பர்.

திங்கட்கிழமை (16/10/2006) இந்த பள்ளியில் இருந்து இன்பச்(!!!) சுற்றுலாவிற்கு அண்ணாநகரில் உள்ள டவர் பூங்கா சென்றுள்ளனர். 140 குழந்தைகளுடன் நெடிதுயர்ந்த டவருக்கு சென்றதே முதல் குற்றம். நான்கு ஆசிரியைகளும், ஒரு ஆயாவும், இந்த 140 குழந்தைகளை பூங்காவிற்கு
நடத்திச்சென்றுள்ளனர். விதிமுறைகளின் படி சுற்றுலா செல்லும்போது 15 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் கண்காணிப்பிற்கு.
ஆனால் நாம் தான் விதிமுறைகளை -- முக்கியமாக குழந்தைகள் விஷயத்தில் -- காற்றில் பறக்க விடுவதையே வாடிக்கையாக வைத்திருக்கின்றோமே! யாரோ பெற்ற குழந்தைகள் தாமே!!

இந்த பூங்காவினுள் இரண்டு தாமரைக்குட்டைகள் இருக்கும். இந்த குட்டைகள் முழு கொள்ளளவிற்கு (பெரியவர்களின் இடுப்பு வரை) பச்சைப் பசேல் என்ற பாசியுடன் நிரம்பி இருக்கின்றன. பெரியவர்களால் மட்டுமே, அதுவும் கூட பலமுறை இந்தப் பூங்காவிற்கு வந்தவர்களால் மட்டுமே, இந்த
குட்டையின் தண்ணீருக்கும், அதன் பக்கத்து புல் தரைக்கும் வித்தியாசம் காண முடியும். இப்படி இருக்க பூங்காவிற்கு அழைத்து சென்ற
ஆசிரியர்கள் குறைந்தபட்சம் இந்த குட்டை இருக்கும் பகுதியையாவது தவிர்த்திருக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கும்
இங்கு கண்டிக்கப்படவேண்டும். இந்த குட்டைக்கு முறையான தடுப்பு அமைக்கப்படவில்லை. இந்தப் பூங்காவின் சீரமைப்பு பணியினை மேற்கொண்டு வந்ததாகக் கூறும் மாநகராட்சியினர், உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்ததாக சால்ஜாப்பு கூறுகின்றனர்.


நந்தினி என்ற அந்த நான்கு வயது குழந்தை மூழ்கி இறந்தது நெடுநேரம் வரையில் ஆசிரியைகளல் அறியப்படவேயில்லை. வண்டியில் ஏறிய பின்னர்
ரோல் கால் செய்யும் போது குழந்தை காணாமல் போனது அறியப்பட்டு, பூங்கா முழுக்கத் தேடி கடைசியில் குட்டையில் பிணமாகக் கண்டெடுத்து
இருக்கின்றனர்.
கும்பகோணம் சம்பவத்தில் சற்றேறக்குறைய ஒரு நூறு குழந்தைகளை தீயிலிட்டு கொன்ற பள்ளி நிர்வாகம், ஆண்டுகள் இரண்டாகியும், பெரிதான
தண்டனை ஏதும் அடையவில்லை. ஓலைக்குடிசையில் வகுப்பு அமைக்க ஒப்புதல் கொடுத்த நகராட்சி அதிகாரிகளுக்கு என்ன தண்டனை --
வருடந்தோறும் தணிக்கையின் போது அந்தப் பள்ளியின் வசதிக்குறையை மூடி மறைத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? கையூட்டு
பெற்றுத்தானே இந்த பாதகத்தை செய்திருப்பார்கள்? அந்த அதிகாரிகளின் வீட்டில் பொங்கும் ஒவ்வொரு சோற்று பருக்கையும் குழந்தைகளின்
சதைப் பொசுங்கும் நாற்றத்துடன் தானே திகழ்ந்து கொண்டிருக்கும் ?
இந்தக் கொடுஞ்சம்பவத்திற்குப் பின்னரும் எத்தனை குழந்தைகளை பள்ளி நிர்வாகங்களின் அலட்சிய போக்கிற்கு பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். சென்னையில் புகழ்பெற்ற பெயின் (CSI Bain) பள்ளியில் நர்சரி வகுப்பைச் சேர்ந்த ஒரு குழந்தை, seesaw என்னும் விளையாட்டில் இருந்த போது, கம்பி குத்தி அவ்விடத்திலேயே மரணம் அடைந்தான். இதில் விளையாடும் குழந்தைகள் பிடித்துக்கொள்வதற்கு தோதாக வடிவில் கம்பி இருக்கும். ஆனால் அந்த பள்ளியில் கம்பியில் பகுதி உடைந்து போய் பல நாளாகி இருக்கிறது. வெறும் பகுதி மட்டுமே இருந்துள்ளது. மேலே சென்ற இருக்கை தாழ்ந்து தரையை மோதும் போது இந்த கம்பி அந்த குழந்தையின் நெஞ்சில் பாய்ந்தது. எத்தனை பெரிய கொடுமை! இவ்வளவிற்கு பின்னரும் அந்தப் பள்ளி, பொறுப்பை தட்டி கழித்து, மாணவனின் அராஜகத்தினால் மரணம் நிகழ்ந்தது என்று கூசாமல் சொல்லியது. குழந்தையிடம் ஜாக்கிரதையை எதிர்பார்க்கிறார்கள் இந்த கயவர்கள்.

பல சம்பவங்கள். எத்தனை வேன் விபத்துக்கள் நடந்து விட்டன! ஒரு சிறிய வேனில் ஆட்டு மந்தையென பிள்ளைகளை அடைத்து காசு பார்க்கும்
பள்ளிகள். அந்த வேன்கள் கூட சரியான பராமரிப்பின்றியும் கவனக்குறைவாலும், கடந்த சில மாதங்களில் நிறைய விபத்துகளை சந்தித்தன. அந்த வேன் விபத்துகளின் பிறகு சிறிது நாட்கள் சில உத்தரவுகளை போட்டது அரசு! அவ்வளவே தான். இப்போது வழக்கம் போல் பள்ளிகள் விதிமுறைகளை மீறிக் கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு ஆட்டோக்கள். ஒரு ஆட்டோவில் 15 குழந்தைகளைக் கூட அழைத்துப்போகிறார்கள். நெஞ்சு பதைக்கிறது இந்த காட்சிகளை பார்க்கும் போது. உண்மையை சொல்லப்போனால் ஒரு குருட்டதிர்ஷ்டத்தில் தான் வீடு வந்து சேர்கின்றன ஒவ்வொரு குழந்தையும். போருக்கு செல்லும் ராணுவத்தினர் கூட பத்திரமாக வீடு வந்து சேர்ந்து விடுவார்கள் போலும்; நம் குழந்தைகள் பள்ளி சென்று வீடு திரும்புவது என்பது நிச்சியமில்லை.

ஒவ்வொரு பள்ளியும் கல்விக் கட்டணம் என கணிசமான ஒரு தொகையை வசூலிக்கிறார்களே. அதனுடன் சேர்த்து ஒரு நியாயமான போக்குவரத்து
கட்டணத்தை வசூலித்து, போதிய வேன், பஸ்களை ஏற்பாடு செய்து கொடுத்தால், பெற்றோர்கள் ஏன் ஆட்டோவை நம்பி இருக்கப்போகிறார்கள்?
பெரும்பாலான பள்ளிகளில் போக்குவரத்து கட்டணம் என்று வசூலிப்பது மிகப்பெரியத் தொகை. எரிபொருள் செலவு, ஓட்டுனர் சம்பளம்,
வண்டிகளின் தேய்மானம் என்று எப்படி கணக்கு பார்த்தாலும், ஒரு குழந்தைக்கு மாதத்திற்கு 100 ரூபாய்க்கு மேல் ஆகவே ஆகாது. ஆனால் பல
பள்ளிகளில் கட்டணம் 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை செல்கிறது. ஏதாவது ஒரு ரூபத்தில் காசு பிடுங்க வேண்டும் என்ற வெறி.

மிகச் சாதரணமானவர்களின் குழந்தைகள் பெரும்பாலும் பேருந்தை நம்பியே இருக்கின்றனர். இந்த மாணவர்கள் ஏறும் வரை கூட பொறுமையாக
இருக்க முடியாமல் விசில் ஊதும் நடத்துனர்கள் அநேகம். சில நாட்களுக்கு முன்னர் பேருந்தில் நான் பயணம் சென்று கொண்டிருந்தபோது, ஒரு
நிறுத்தத்தில் நிறைய பள்ளி மாணவர்கள் ஏறினர். அவ்வளவு பேரும் சுமார் ஏழு முதல் பத்து வயதிற்கு உட்பட்ட சுட்டிக் குழந்தைகள். பெரும்
சப்தத்துடன் தங்களுக்குள் பேசிக்கொண்டும், சிறு சண்டைகள் இட்டுக் கொண்டும், கவலையின்றி வந்து கொண்டிருந்தனர். குழந்தைகள் தானே! இது
அவர்கள் இயல்பு தானே! சில குழந்தைகள் தங்கள் விளையாட்டினால் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டிருந்த பயணிகள் மீது சாய்ந்து கொண்டும்,
இடித்துக் கொண்டும் வந்தனர். வந்தார் நடத்துனர், இரண்டு மூன்று குழந்தைகளின் கன்னங்களில் பளார் என்று அரைந்தார். சில பயணிகள்
அவருக்கு துணையாக, "ஆமாம் சார், அப்படித்தான், கொடுங்கள் நன்றாக, அப்போது தான் இந்த எமன்கள் அடங்கும்" என்று சொன்னார்கள். யார்
எமன்கள்? இந்த நியாயவான்கள் தங்கள் பிள்ளைப்பருவத்தில் தத்தமது வாலினை சுருட்டி குண்டியில் அடக்கிக் கொண்டார்களா என்ன ?

மிகக் கடுமையான சட்டம் கொண்டுவருவது மட்டும் என நிறுத்திக் கொள்ளாமல் அதை முழுவதுமாக செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க ஒரு குழு அமைத்து, பாரபட்சம், தயவு தாட்சண்யம் இல்லாமல் அரசு செயல்பட்டால் ஒரு வேளை இந்த வன்முறை ஒழிக்கப்படக்கூடும். எந்த சட்டம் கொண்டுவந்தாலும் பொசுக்கென்று நீதிமன்றங்களுக்கு சென்று தடைவாங்கி விட முடிவது மற்றொரு அவலம்.

புத்தாடை

அடுத்த தீபாவளியின்
புதுத்துணியை இப்போதே
காணும் பாக்கியம்
உண்டோ உங்களுக்கு?
எனக்கு உண்டு.
கரும்பச்சை நிறத்தில்
காற்சட்டை
கிளிப்பச்சை நிறத்தில்
முழுச்சட்டை.
கைமடிப்பிலோ
காலர் ஓரத்திலோ
சட்டைப் பையின்
அருகிலோ
கால் மூட்டிலோ
இடுப்பு வார்பட்டியின்
இரண்டொரு காதுகளிலோ
கிழிசல் ஏற்பட்டு, சற்றே
சாயம் மங்கி
அடுத்த தீபாவளிக்குள்
என்னிடம் வந்துவிடும்
சின்ன அய்யாவின்
புத்தாடை

நமது வன்முறைக்கு மற்றொரு குழந்தை பலியாகிவிட்டது


இதோ மற்றொரு குழந்தை நமது வன்முறைக்கு பலியாகிவிட்டது.

நான் சொல்ல வருவது, திங்கள் அன்று சென்னை அண்ணா நகர் குட்டையில் விழுந்து D.A.V. பள்ளியைச் சேர்ந்த குழந்தை மரணமடைந்த பெருந்துயர சம்பவத்தைதான்.

கோபாலபுரத்தில் அமைந்த D.A.V. பள்ளியில் சேர்க்கை கிடைப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. முதல் நாள் இரவே நெடிய வரிசையில் நின்று
விண்ணப்பம் வாங்கி, சிபாரிசு செய்ய உயர்ந்த மனிதர்களை பிடித்து, சில பத்தாயிரங்களை கொட்டிக் கொடுத்து அழுத பின்னர் மட்டுமே ஒரு குழந்தை அந்த பள்ளியில் கால் வைக்க முடியும்.

நினைத்து பாருங்கள், அதன் பெற்றோர் எத்தனை வண்ணக் கனவுகளில் மிதந்து கொண்டிருப்பர்.

திங்கட்கிழமை (16/10/2006) இந்த பள்ளியில் இருந்து இன்பச்(!!!) சுற்றுலாவிற்கு அண்ணாநகரில் உள்ள டவர் பூங்கா சென்றுள்ளனர். 140 குழந்தைகளுடன் நெடிதுயர்ந்த டவருக்கு சென்றதே முதல் குற்றம். நான்கு ஆசிரியைகளும், ஒரு ஆயாவும், இந்த 140 குழந்தைகளை பூங்காவிற்கு
நடத்திச்சென்றுள்ளனர். விதிமுறைகளின் படி சுற்றுலா செல்லும்போது 15 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் கண்காணிப்பிற்கு.
ஆனால் நாம் தான் விதிமுறைகளை -- முக்கியமாக குழந்தைகள் விஷயத்தில் -- காற்றில் பறக்க விடுவதையே வாடிக்கையாக வைத்திருக்கின்றோமே! யாரோ பெற்ற குழந்தைகள் தாமே!!

இந்த பூங்காவினுள் இரண்டு தாமரைக்குட்டைகள் இருக்கும். இந்த குட்டைகள் முழு கொள்ளளவிற்கு (பெரியவர்களின் இடுப்பு வரை) பச்சைப் பசேல் என்ற பாசியுடன் நிரம்பி இருக்கின்றன. பெரியவர்களால் மட்டுமே, அதுவும் கூட பலமுறை இந்தப் பூங்காவிற்கு வந்தவர்களால் மட்டுமே, இந்த
குட்டையின் தண்ணீருக்கும், அதன் பக்கத்து புல் தரைக்கும் வித்தியாசம் காண முடியும். இப்படி இருக்க பூங்காவிற்கு அழைத்து சென்ற
ஆசிரியர்கள் குறைந்தபட்சம் இந்த குட்டை இருக்கும் பகுதியையாவது தவிர்த்திருக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கும்
இங்கு கண்டிக்கப்படவேண்டும். இந்த குட்டைக்கு முறையான தடுப்பு அமைக்கப்படவில்லை. இந்தப் பூங்காவின் சீரமைப்பு பணியினை மேற்கொண்டு வந்ததாகக் கூறும் மாநகராட்சியினர், உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்ததாக சால்ஜாப்பு கூறுகின்றனர்.


நந்தினி என்ற அந்த நான்கு வயது குழந்தை மூழ்கி இறந்தது நெடுநேரம் வரையில் ஆசிரியைகளல் அறியப்படவேயில்லை. வண்டியில் ஏறிய பின்னர்
ரோல் கால் செய்யும் போது குழந்தை காணாமல் போனது அறியப்பட்டு, பூங்கா முழுக்கத் தேடி கடைசியில் குட்டையில் பிணமாகக் கண்டெடுத்து
இருக்கின்றனர்.
கும்பகோணம் சம்பவத்தில் சற்றேறக்குறைய ஒரு நூறு குழந்தைகளை தீயிலிட்டு கொன்ற பள்ளி நிர்வாகம், ஆண்டுகள் இரண்டாகியும், பெரிதான
தண்டனை ஏதும் அடையவில்லை. ஓலைக்குடிசையில் வகுப்பு அமைக்க ஒப்புதல் கொடுத்த நகராட்சி அதிகாரிகளுக்கு என்ன தண்டனை --
வருடந்தோறும் தணிக்கையின் போது அந்தப் பள்ளியின் வசதிக்குறையை மூடி மறைத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? கையூட்டு
பெற்றுத்தானே இந்த பாதகத்தை செய்திருப்பார்கள்? அந்த அதிகாரிகளின் வீட்டில் பொங்கும் ஒவ்வொரு சோற்று பருக்கையும் குழந்தைகளின்
சதைப் பொசுங்கும் நாற்றத்துடன் தானே திகழ்ந்து கொண்டிருக்கும் ?
இந்தக் கொடுஞ்சம்பவத்திற்குப் பின்னரும் எத்தனை குழந்தைகளை பள்ளி நிர்வாகங்களின் அலட்சிய போக்கிற்கு பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். சென்னையில் புகழ்பெற்ற பெயின் (CSI Bain) பள்ளியில் நர்சரி வகுப்பைச் சேர்ந்த ஒரு குழந்தை, seesaw என்னும் விளையாட்டில் இருந்த போது, கம்பி குத்தி அவ்விடத்திலேயே மரணம் அடைந்தான். இதில் விளையாடும் குழந்தைகள் பிடித்துக்கொள்வதற்கு தோதாக வடிவில் கம்பி இருக்கும். ஆனால் அந்த பள்ளியில் கம்பியில் பகுதி உடைந்து போய் பல நாளாகி இருக்கிறது. வெறும் பகுதி மட்டுமே இருந்துள்ளது. மேலே சென்ற இருக்கை தாழ்ந்து தரையை மோதும் போது இந்த கம்பி அந்த குழந்தையின் நெஞ்சில் பாய்ந்தது. எத்தனை பெரிய கொடுமை! இவ்வளவிற்கு பின்னரும் அந்தப் பள்ளி, பொறுப்பை தட்டி கழித்து, மாணவனின் அராஜகத்தினால் மரணம் நிகழ்ந்தது என்று கூசாமல் சொல்லியது. குழந்தையிடம் ஜாக்கிரதையை எதிர்பார்க்கிறார்கள் இந்த கயவர்கள்.

பல சம்பவங்கள். எத்தனை வேன் விபத்துக்கள் நடந்து விட்டன! ஒரு சிறிய வேனில் ஆட்டு மந்தையென பிள்ளைகளை அடைத்து காசு பார்க்கும்
பள்ளிகள். அந்த வேன்கள் கூட சரியான பராமரிப்பின்றியும் கவனக்குறைவாலும், கடந்த சில மாதங்களில் நிறைய விபத்துகளை சந்தித்தன. அந்த வேன் விபத்துகளின் பிறகு சிறிது நாட்கள் சில உத்தரவுகளை போட்டது அரசு! அவ்வளவே தான். இப்போது வழக்கம் போல் பள்ளிகள் விதிமுறைகளை மீறிக் கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு ஆட்டோக்கள். ஒரு ஆட்டோவில் 15 குழந்தைகளைக் கூட அழைத்துப்போகிறார்கள். நெஞ்சு பதைக்கிறது இந்த காட்சிகளை பார்க்கும் போது. உண்மையை சொல்லப்போனால் ஒரு குருட்டதிர்ஷ்டத்தில் தான் வீடு வந்து சேர்கின்றன ஒவ்வொரு குழந்தையும். போருக்கு செல்லும் ராணுவத்தினர் கூட பத்திரமாக வீடு வந்து சேர்ந்து விடுவார்கள் போலும்; நம் குழந்தைகள் பள்ளி சென்று வீடு திரும்புவது என்பது நிச்சியமில்லை.

ஒவ்வொரு பள்ளியும் கல்விக் கட்டணம் என கணிசமான ஒரு தொகையை வசூலிக்கிறார்களே. அதனுடன் சேர்த்து ஒரு நியாயமான போக்குவரத்து
கட்டணத்தை வசூலித்து, போதிய வேன், பஸ்களை ஏற்பாடு செய்து கொடுத்தால், பெற்றோர்கள் ஏன் ஆட்டோவை நம்பி இருக்கப்போகிறார்கள்?
பெரும்பாலான பள்ளிகளில் போக்குவரத்து கட்டணம் என்று வசூலிப்பது மிகப்பெரியத் தொகை. எரிபொருள் செலவு, ஓட்டுனர் சம்பளம்,
வண்டிகளின் தேய்மானம் என்று எப்படி கணக்கு பார்த்தாலும், ஒரு குழந்தைக்கு மாதத்திற்கு 100 ரூபாய்க்கு மேல் ஆகவே ஆகாது. ஆனால் பல
பள்ளிகளில் கட்டணம் 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை செல்கிறது. ஏதாவது ஒரு ரூபத்தில் காசு பிடுங்க வேண்டும் என்ற வெறி.

மிகச் சாதரணமானவர்களின் குழந்தைகள் பெரும்பாலும் பேருந்தை நம்பியே இருக்கின்றனர். இந்த மாணவர்கள் ஏறும் வரை கூட பொறுமையாக
இருக்க முடியாமல் விசில் ஊதும் நடத்துனர்கள் அநேகம். சில நாட்களுக்கு முன்னர் பேருந்தில் நான் பயணம் சென்று கொண்டிருந்தபோது, ஒரு
நிறுத்தத்தில் நிறைய பள்ளி மாணவர்கள் ஏறினர். அவ்வளவு பேரும் சுமார் ஏழு முதல் பத்து வயதிற்கு உட்பட்ட சுட்டிக் குழந்தைகள். பெரும்
சப்தத்துடன் தங்களுக்குள் பேசிக்கொண்டும், சிறு சண்டைகள் இட்டுக் கொண்டும், கவலையின்றி வந்து கொண்டிருந்தனர். குழந்தைகள் தானே! இது
அவர்கள் இயல்பு தானே! சில குழந்தைகள் தங்கள் விளையாட்டினால் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டிருந்த பயணிகள் மீது சாய்ந்து கொண்டும்,
இடித்துக் கொண்டும் வந்தனர். வந்தார் நடத்துனர், இரண்டு மூன்று குழந்தைகளின் கன்னங்களில் பளார் என்று அரைந்தார். சில பயணிகள்
அவருக்கு துணையாக, "ஆமாம் சார், அப்படித்தான், கொடுங்கள் நன்றாக, அப்போது தான் இந்த எமன்கள் அடங்கும்" என்று சொன்னார்கள். யார்
எமன்கள்? இந்த நியாயவான்கள் தங்கள் பிள்ளைப்பருவத்தில் தத்தமது வாலினை சுருட்டி குண்டியில் அடக்கிக் கொண்டார்களா என்ன ?

மிகக் கடுமையான சட்டம் கொண்டுவருவது மட்டும் என நிறுத்திக் கொள்ளாமல் அதை முழுவதுமாக செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க ஒரு குழு அமைத்து, பாரபட்சம், தயவு தாட்சண்யம் இல்லாமல் அரசு செயல்பட்டால் ஒரு வேளை இந்த வன்முறை ஒழிக்கப்படக்கூடும். எந்த சட்டம் கொண்டுவந்தாலும் பொசுக்கென்று நீதிமன்றங்களுக்கு சென்று தடைவாங்கி விட முடிவது மற்றொரு அவலம்.

Wednesday, October 18, 2006

சுடுகிறது நிஜம்


குழந்தைக்கு நிலா காட்டி
வடை சுடும் பாட்டி
கதையை சொல்லி
சோறூட்டிய மனைவியிடம்
இன்னும் எத்தனை
குழந்தைகள் சோறுண்ண
பாட்டி வடை சுடுவாளோ
கதையை மாத்துடி என்றேன்.
நல்ல வேளை . . .
அண்ணாவின் டாக்டர் படிப்பு
தங்கையின் திருமணம்
என்னுடைய வெளிநாட்டு
கணிப்பொறி வேலை
இத்தனைக்குப் பின்னரும்
கூனல் முதுகுடனும்
ஒட்டிய கன்னங்களுடனும்
இன்னும் கிராமத்தில்
இட்லி சுடும்
அம்மா பற்றி என்னிடம்
ஏதும் கேட்கவில்லை
என் மனசாட்சி

Tuesday, October 17, 2006

அருக்கம்



ஆழ்துளைக் கிணறு
தோண்டுவதை
பார்க்க பார்க்க
ஆர்வம் கூடியது.
பத்தடி இருபது அடி
ஐம்பது அடி எழுபது அடி
நூறு அடியில்
தண்ணீர் கிடைத்தது.

இன்னும் சில அடிகள்
தோண்டினால் எண்ணெய்
கிடைக்கலாம்
ஏன் வைரம் கூட
கிடைக்கலாம்.

ஆனால் பூமிப்பந்தின்
மறுமுனை வரை தோண்டினாலும்
கிடைக்கவே போவதில்லை
பள்ளி பருவத்தில்
நாங்கள் விரல்களால்
நிலம் கீறி கண்டெடுத்து
விளையாடி மகிழ்ந்த
மண்
புழு

Monday, October 16, 2006

ஞாபகம் வந்தது

பிரசவ வேதனையில்
கையால் மெத்தைகிழித்து
மனைவி அலறித்
துடித்த போதும் . . .

பஞ்சுப் பொதியினுள்
பட்டு ரோஜாவாய்
என் மகனை
செவிலிப் பெண்
என்னிடம் காட்டியபோதும் . . .

அப்பா என முதன்முதலில்
அவன் குழல் தோற்கும்
பிஞ்சு மொழியில்
எனை அழைத்த போதும் . . .

பள்ளியில் மகனை
முதல் நாள் அமர வைத்து
இனம்புரியா உணர்ச்சியுடன்
கண்ணோரம் துளிர்த்தநீருடன்
விடைபெற்ற போதும் . . .

காய்ச்சலில் அவதிப்பட்ட
பத்துவயது மகளை
இடுப்பில் சுமந்து கொண்டு
பக்கத்து தெரு மருத்துவரிடம்
மனைவி ஓடியபோதும் . . .

ஊரெல்லாம் தீபாவளி
கலைகட்டியிருக்க இரவுமுழுதும்
அலைந்து எப்படியோ
திரட்டிய பணத்தில்
பட்டாசு புதுத்துணியுடன்
குழந்தைகள் முன்நின்று
அவர்கள் ஓடிவந்து எனது
கால்களை கட்டிக்கொண்டபோதும் . . .

ஸ்கூட்டர் பழகுகிறேன்
என்று கீழே விழுந்து
உடம்பெல்லாம் அடிபட்ட
பதினெட்டு வயது மகனை
அவன் கூச்சப்படப்பட
குளிப்பாட்டி, சோறூட்டி
மனைவி கவனித்தபோதும் . . .

நல்ல வேலை, கைநிறைய
சம்பளம் என்று
அயல்நாட்டில் கிடைத்த
வேலைக்கு கிளம்பிய
மகனை விமானநிலையத்தில்
கட்டியணைத்து உச்சிமுகர்ந்தபோதும் . . .

திருமணம் முடித்து மகளை
புகுந்த வீட்டிற்கு வழியனுப்பி
அடுத்தடுத்த நாட்களில்
என் மடிமீது மனைவியும்
அவள் மடிமீது நானும்
முகம் புதைத்து விம்மி
கதறியபோதும் . . .

தகவல் சொல்லாமல்
திடீரென வந்துவிட்ட
பக்கவாதத்தால் தாக்கப்பட்டு
படுக்கையில் நான்
முடங்கிப்போக -- சோறுடனும்
பாலுடனும், நம்பிக்கையையும்
எனக்கு ஊட்டி மனைவி
எனைத் தழுவிக் கொண்டபோதும் . . .

சத்திய தரிசனமாய்
நான் உணர்ந்து கொண்டேன்
என் பெற்றோரின் அன்பை.

Saturday, October 14, 2006

அச்சாரம்

திடும் திடுமென விரையும்
தொடர்வண்டியின்
இரைச்சலை மீறி
எழுந்தது ஒரு பிள்ளையின்
குரல் -- "பசிக்குது"

ஒரு கை இல்லாத அந்த
குழந்தையின் குரல்
பரிதாபமாகத்தான் இருந்தது
நிஜத்தில்.
கைப்பை திறந்து பணம்
கொடுத்த மனைவிக்கு
தெரியாது -- பாவம்
இந்த பணம் மற்றொரு
குழந்தையின் கை அறுப்பிற்கு
கொடுக்கப்படும்
அச்சாரம் என்று.