இதோ மற்றொரு குழந்தை நமது வன்முறைக்கு பலியாகிவிட்டது.
நான் சொல்ல வருவது, திங்கள் அன்று சென்னை அண்ணா நகர் குட்டையில் விழுந்து D.A.V. பள்ளியைச் சேர்ந்த குழந்தை மரணமடைந்த பெருந்துயர சம்பவத்தைதான்.
கோபாலபுரத்தில் அமைந்த D.A.V. பள்ளியில் சேர்க்கை கிடைப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. முதல் நாள் இரவே நெடிய வரிசையில் நின்று
விண்ணப்பம் வாங்கி, சிபாரிசு செய்ய உயர்ந்த மனிதர்களை பிடித்து, சில பத்தாயிரங்களை கொட்டிக் கொடுத்து அழுத பின்னர் மட்டுமே ஒரு குழந்தை அந்த பள்ளியில் கால் வைக்க முடியும்.
நினைத்து பாருங்கள், அதன் பெற்றோர் எத்தனை வண்ணக் கனவுகளில் மிதந்து கொண்டிருப்பர்.
திங்கட்கிழமை (16/10/2006) இந்த பள்ளியில் இருந்து இன்பச்(!!!) சுற்றுலாவிற்கு அண்ணாநகரில் உள்ள டவர் பூங்கா சென்றுள்ளனர். 140 குழந்தைகளுடன் நெடிதுயர்ந்த டவருக்கு சென்றதே முதல் குற்றம். நான்கு ஆசிரியைகளும், ஒரு ஆயாவும், இந்த 140 குழந்தைகளை பூங்காவிற்கு
நடத்திச்சென்றுள்ளனர். விதிமுறைகளின் படி சுற்றுலா செல்லும்போது 15 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் கண்காணிப்பிற்கு.
ஆனால் நாம் தான் விதிமுறைகளை -- முக்கியமாக குழந்தைகள் விஷயத்தில் -- காற்றில் பறக்க விடுவதையே வாடிக்கையாக வைத்திருக்கின்றோமே! யாரோ பெற்ற குழந்தைகள் தாமே!!
இந்த பூங்காவினுள் இரண்டு தாமரைக்குட்டைகள் இருக்கும். இந்த குட்டைகள் முழு கொள்ளளவிற்கு (பெரியவர்களின் இடுப்பு வரை) பச்சைப் பசேல் என்ற பாசியுடன் நிரம்பி இருக்கின்றன. பெரியவர்களால் மட்டுமே, அதுவும் கூட பலமுறை இந்தப் பூங்காவிற்கு வந்தவர்களால் மட்டுமே, இந்த
குட்டையின் தண்ணீருக்கும், அதன் பக்கத்து புல் தரைக்கும் வித்தியாசம் காண முடியும். இப்படி இருக்க பூங்காவிற்கு அழைத்து சென்ற
ஆசிரியர்கள் குறைந்தபட்சம் இந்த குட்டை இருக்கும் பகுதியையாவது தவிர்த்திருக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கும்
இங்கு கண்டிக்கப்படவேண்டும். இந்த குட்டைக்கு முறையான தடுப்பு அமைக்கப்படவில்லை. இந்தப் பூங்காவின் சீரமைப்பு பணியினை மேற்கொண்டு வந்ததாகக் கூறும் மாநகராட்சியினர், உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்ததாக சால்ஜாப்பு கூறுகின்றனர்.

நந்தினி என்ற அந்த நான்கு வயது குழந்தை மூழ்கி இறந்தது நெடுநேரம் வரையில் ஆசிரியைகளல் அறியப்படவேயில்லை. வண்டியில் ஏறிய பின்னர்
ரோல் கால் செய்யும் போது குழந்தை காணாமல் போனது அறியப்பட்டு, பூங்கா முழுக்கத் தேடி கடைசியில் குட்டையில் பிணமாகக் கண்டெடுத்து
இருக்கின்றனர்.
கும்பகோணம் சம்பவத்தில் சற்றேறக்குறைய ஒரு நூறு குழந்தைகளை தீயிலிட்டு கொன்ற பள்ளி நிர்வாகம், ஆண்டுகள் இரண்டாகியும், பெரிதான
தண்டனை ஏதும் அடையவில்லை. ஓலைக்குடிசையில் வகுப்பு அமைக்க ஒப்புதல் கொடுத்த நகராட்சி அதிகாரிகளுக்கு என்ன தண்டனை --
வருடந்தோறும் தணிக்கையின் போது அந்தப் பள்ளியின் வசதிக்குறையை மூடி மறைத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? கையூட்டு
பெற்றுத்தானே இந்த பாதகத்தை செய்திருப்பார்கள்? அந்த அதிகாரிகளின் வீட்டில் பொங்கும் ஒவ்வொரு சோற்று பருக்கையும் குழந்தைகளின்
சதைப் பொசுங்கும் நாற்றத்துடன் தானே திகழ்ந்து கொண்டிருக்கும் ?
தண்டனை ஏதும் அடையவில்லை. ஓலைக்குடிசையில் வகுப்பு அமைக்க ஒப்புதல் கொடுத்த நகராட்சி அதிகாரிகளுக்கு என்ன தண்டனை --
வருடந்தோறும் தணிக்கையின் போது அந்தப் பள்ளியின் வசதிக்குறையை மூடி மறைத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? கையூட்டு
பெற்றுத்தானே இந்த பாதகத்தை செய்திருப்பார்கள்? அந்த அதிகாரிகளின் வீட்டில் பொங்கும் ஒவ்வொரு சோற்று பருக்கையும் குழந்தைகளின்
சதைப் பொசுங்கும் நாற்றத்துடன் தானே திகழ்ந்து கொண்டிருக்கும் ?
இந்தக் கொடுஞ்சம்பவத்திற்குப் பின்னரும் எத்தனை குழந்தைகளை பள்ளி நிர்வாகங்களின் அலட்சிய போக்கிற்கு பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். சென்னையில் புகழ்பெற்ற பெயின் (CSI Bain) பள்ளியில் நர்சரி வகுப்பைச் சேர்ந்த ஒரு குழந்தை, seesaw என்னும் விளையாட்டில் இருந்த போது, கம்பி குத்தி அவ்விடத்திலேயே மரணம் அடைந்தான். இதில் விளையாடும் குழந்தைகள் பிடித்துக்கொள்வதற்கு தோதாக ┬ வடிவில் கம்பி இருக்கும். ஆனால் அந்த பள்ளியில் ┬ கம்பியில் ─ பகுதி உடைந்து போய் பல நாளாகி இருக்கிறது. வெறும் │ பகுதி மட்டுமே இருந்துள்ளது. மேலே சென்ற இருக்கை தாழ்ந்து தரையை மோதும் போது இந்த கம்பி அந்த குழந்தையின் நெஞ்சில் பாய்ந்தது. எத்தனை பெரிய கொடுமை! இவ்வளவிற்கு பின்னரும் அந்தப் பள்ளி, பொறுப்பை தட்டி கழித்து, மாணவனின் அராஜகத்தினால் மரணம் நிகழ்ந்தது என்று கூசாமல் சொல்லியது. குழந்தையிடம் ஜாக்கிரதையை எதிர்பார்க்கிறார்கள் இந்த கயவர்கள்.
பல சம்பவங்கள். எத்தனை வேன் விபத்துக்கள் நடந்து விட்டன! ஒரு சிறிய வேனில் ஆட்டு மந்தையென பிள்ளைகளை அடைத்து காசு பார்க்கும்
பள்ளிகள். அந்த வேன்கள் கூட சரியான பராமரிப்பின்றியும் கவனக்குறைவாலும், கடந்த சில மாதங்களில் நிறைய விபத்துகளை சந்தித்தன. அந்த வேன் விபத்துகளின் பிறகு சிறிது நாட்கள் சில உத்தரவுகளை போட்டது அரசு! அவ்வளவே தான். இப்போது வழக்கம் போல் பள்ளிகள் விதிமுறைகளை மீறிக் கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு ஆட்டோக்கள். ஒரு ஆட்டோவில் 15 குழந்தைகளைக் கூட அழைத்துப்போகிறார்கள். நெஞ்சு பதைக்கிறது இந்த காட்சிகளை பார்க்கும் போது. உண்மையை சொல்லப்போனால் ஒரு குருட்டதிர்ஷ்டத்தில் தான் வீடு வந்து சேர்கின்றன ஒவ்வொரு குழந்தையும். போருக்கு செல்லும் ராணுவத்தினர் கூட பத்திரமாக வீடு வந்து சேர்ந்து விடுவார்கள் போலும்; நம் குழந்தைகள் பள்ளி சென்று வீடு திரும்புவது என்பது நிச்சியமில்லை.
ஒவ்வொரு பள்ளியும் கல்விக் கட்டணம் என கணிசமான ஒரு தொகையை வசூலிக்கிறார்களே. அதனுடன் சேர்த்து ஒரு நியாயமான போக்குவரத்து
கட்டணத்தை வசூலித்து, போதிய வேன், பஸ்களை ஏற்பாடு செய்து கொடுத்தால், பெற்றோர்கள் ஏன் ஆட்டோவை நம்பி இருக்கப்போகிறார்கள்?
பெரும்பாலான பள்ளிகளில் போக்குவரத்து கட்டணம் என்று வசூலிப்பது மிகப்பெரியத் தொகை. எரிபொருள் செலவு, ஓட்டுனர் சம்பளம்,
வண்டிகளின் தேய்மானம் என்று எப்படி கணக்கு பார்த்தாலும், ஒரு குழந்தைக்கு மாதத்திற்கு 100 ரூபாய்க்கு மேல் ஆகவே ஆகாது. ஆனால் பல
பள்ளிகளில் கட்டணம் 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை செல்கிறது. ஏதாவது ஒரு ரூபத்தில் காசு பிடுங்க வேண்டும் என்ற வெறி.
மிகச் சாதரணமானவர்களின் குழந்தைகள் பெரும்பாலும் பேருந்தை நம்பியே இருக்கின்றனர். இந்த மாணவர்கள் ஏறும் வரை கூட பொறுமையாக
இருக்க முடியாமல் விசில் ஊதும் நடத்துனர்கள் அநேகம். சில நாட்களுக்கு முன்னர் பேருந்தில் நான் பயணம் சென்று கொண்டிருந்தபோது, ஒரு
நிறுத்தத்தில் நிறைய பள்ளி மாணவர்கள் ஏறினர். அவ்வளவு பேரும் சுமார் ஏழு முதல் பத்து வயதிற்கு உட்பட்ட சுட்டிக் குழந்தைகள். பெரும்
சப்தத்துடன் தங்களுக்குள் பேசிக்கொண்டும், சிறு சண்டைகள் இட்டுக் கொண்டும், கவலையின்றி வந்து கொண்டிருந்தனர். குழந்தைகள் தானே! இது
அவர்கள் இயல்பு தானே! சில குழந்தைகள் தங்கள் விளையாட்டினால் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டிருந்த பயணிகள் மீது சாய்ந்து கொண்டும்,
இடித்துக் கொண்டும் வந்தனர். வந்தார் நடத்துனர், இரண்டு மூன்று குழந்தைகளின் கன்னங்களில் பளார் என்று அரைந்தார். சில பயணிகள்
அவருக்கு துணையாக, "ஆமாம் சார், அப்படித்தான், கொடுங்கள் நன்றாக, அப்போது தான் இந்த எமன்கள் அடங்கும்" என்று சொன்னார்கள். யார்
எமன்கள்? இந்த நியாயவான்கள் தங்கள் பிள்ளைப்பருவத்தில் தத்தமது வாலினை சுருட்டி குண்டியில் அடக்கிக் கொண்டார்களா என்ன ?
மிகக் கடுமையான சட்டம் கொண்டுவருவது மட்டும் என நிறுத்திக் கொள்ளாமல் அதை முழுவதுமாக செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க ஒரு குழு அமைத்து, பாரபட்சம், தயவு தாட்சண்யம் இல்லாமல் அரசு செயல்பட்டால் ஒரு வேளை இந்த வன்முறை ஒழிக்கப்படக்கூடும். எந்த சட்டம் கொண்டுவந்தாலும் பொசுக்கென்று நீதிமன்றங்களுக்கு சென்று தடைவாங்கி விட முடிவது மற்றொரு அவலம்.
பல சம்பவங்கள். எத்தனை வேன் விபத்துக்கள் நடந்து விட்டன! ஒரு சிறிய வேனில் ஆட்டு மந்தையென பிள்ளைகளை அடைத்து காசு பார்க்கும்
பள்ளிகள். அந்த வேன்கள் கூட சரியான பராமரிப்பின்றியும் கவனக்குறைவாலும், கடந்த சில மாதங்களில் நிறைய விபத்துகளை சந்தித்தன. அந்த வேன் விபத்துகளின் பிறகு சிறிது நாட்கள் சில உத்தரவுகளை போட்டது அரசு! அவ்வளவே தான். இப்போது வழக்கம் போல் பள்ளிகள் விதிமுறைகளை மீறிக் கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு ஆட்டோக்கள். ஒரு ஆட்டோவில் 15 குழந்தைகளைக் கூட அழைத்துப்போகிறார்கள். நெஞ்சு பதைக்கிறது இந்த காட்சிகளை பார்க்கும் போது. உண்மையை சொல்லப்போனால் ஒரு குருட்டதிர்ஷ்டத்தில் தான் வீடு வந்து சேர்கின்றன ஒவ்வொரு குழந்தையும். போருக்கு செல்லும் ராணுவத்தினர் கூட பத்திரமாக வீடு வந்து சேர்ந்து விடுவார்கள் போலும்; நம் குழந்தைகள் பள்ளி சென்று வீடு திரும்புவது என்பது நிச்சியமில்லை.
ஒவ்வொரு பள்ளியும் கல்விக் கட்டணம் என கணிசமான ஒரு தொகையை வசூலிக்கிறார்களே. அதனுடன் சேர்த்து ஒரு நியாயமான போக்குவரத்து
கட்டணத்தை வசூலித்து, போதிய வேன், பஸ்களை ஏற்பாடு செய்து கொடுத்தால், பெற்றோர்கள் ஏன் ஆட்டோவை நம்பி இருக்கப்போகிறார்கள்?
பெரும்பாலான பள்ளிகளில் போக்குவரத்து கட்டணம் என்று வசூலிப்பது மிகப்பெரியத் தொகை. எரிபொருள் செலவு, ஓட்டுனர் சம்பளம்,
வண்டிகளின் தேய்மானம் என்று எப்படி கணக்கு பார்த்தாலும், ஒரு குழந்தைக்கு மாதத்திற்கு 100 ரூபாய்க்கு மேல் ஆகவே ஆகாது. ஆனால் பல
பள்ளிகளில் கட்டணம் 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை செல்கிறது. ஏதாவது ஒரு ரூபத்தில் காசு பிடுங்க வேண்டும் என்ற வெறி.
மிகச் சாதரணமானவர்களின் குழந்தைகள் பெரும்பாலும் பேருந்தை நம்பியே இருக்கின்றனர். இந்த மாணவர்கள் ஏறும் வரை கூட பொறுமையாக
இருக்க முடியாமல் விசில் ஊதும் நடத்துனர்கள் அநேகம். சில நாட்களுக்கு முன்னர் பேருந்தில் நான் பயணம் சென்று கொண்டிருந்தபோது, ஒரு
நிறுத்தத்தில் நிறைய பள்ளி மாணவர்கள் ஏறினர். அவ்வளவு பேரும் சுமார் ஏழு முதல் பத்து வயதிற்கு உட்பட்ட சுட்டிக் குழந்தைகள். பெரும்
சப்தத்துடன் தங்களுக்குள் பேசிக்கொண்டும், சிறு சண்டைகள் இட்டுக் கொண்டும், கவலையின்றி வந்து கொண்டிருந்தனர். குழந்தைகள் தானே! இது
அவர்கள் இயல்பு தானே! சில குழந்தைகள் தங்கள் விளையாட்டினால் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டிருந்த பயணிகள் மீது சாய்ந்து கொண்டும்,
இடித்துக் கொண்டும் வந்தனர். வந்தார் நடத்துனர், இரண்டு மூன்று குழந்தைகளின் கன்னங்களில் பளார் என்று அரைந்தார். சில பயணிகள்
அவருக்கு துணையாக, "ஆமாம் சார், அப்படித்தான், கொடுங்கள் நன்றாக, அப்போது தான் இந்த எமன்கள் அடங்கும்" என்று சொன்னார்கள். யார்
எமன்கள்? இந்த நியாயவான்கள் தங்கள் பிள்ளைப்பருவத்தில் தத்தமது வாலினை சுருட்டி குண்டியில் அடக்கிக் கொண்டார்களா என்ன ?
மிகக் கடுமையான சட்டம் கொண்டுவருவது மட்டும் என நிறுத்திக் கொள்ளாமல் அதை முழுவதுமாக செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க ஒரு குழு அமைத்து, பாரபட்சம், தயவு தாட்சண்யம் இல்லாமல் அரசு செயல்பட்டால் ஒரு வேளை இந்த வன்முறை ஒழிக்கப்படக்கூடும். எந்த சட்டம் கொண்டுவந்தாலும் பொசுக்கென்று நீதிமன்றங்களுக்கு சென்று தடைவாங்கி விட முடிவது மற்றொரு அவலம்.
3 comments:
I saw your article on sufferings of school children.
The tragic death of a school kid in Anna Nagar Park is really painful.
Your style of narration and the pure tamil words and sentences are really nice to read. I read a nice tamil article after long time.
All the best.
- P. Sudhakar
இவங்களுக்கெல்லாம் "அடி உதவுற மாதிரி அண்னன் தம்பி உதவ மாட்டான்" அப்படீன்னு நிரூபிக்கனும். வேற வழியே கிடையாது.
விழிப்புணர்வூட்டும் நல்ல பதிவு.
அவசர, ஆடம்பர, பொறுப்பற்ற இந்த (வாலிப) நவீன உலகில் இதையெல்லாம் நினைத்து பார்க்ககூட சிலருக்கு நேரம் கிடைக்கமாட்டேன்கிறது. வேலியே பயிரை மேயும் காலமாக ஆகிவிட்டது. இதற்கு மேல் வார்த்தைகள் வர மறுக்கின்றன.
இவ்வெழுத்துகளும் கலங்கலாய் தெரிகின்றன.
உங்கள் பதிவை பூங்காவின் சிறுவர் பகுதியில் வெளியிட கேட்டுகொள்கிறேன்.
Post a Comment