Saturday, October 14, 2006

அச்சாரம்

திடும் திடுமென விரையும்
தொடர்வண்டியின்
இரைச்சலை மீறி
எழுந்தது ஒரு பிள்ளையின்
குரல் -- "பசிக்குது"

ஒரு கை இல்லாத அந்த
குழந்தையின் குரல்
பரிதாபமாகத்தான் இருந்தது
நிஜத்தில்.
கைப்பை திறந்து பணம்
கொடுத்த மனைவிக்கு
தெரியாது -- பாவம்
இந்த பணம் மற்றொரு
குழந்தையின் கை அறுப்பிற்கு
கொடுக்கப்படும்
அச்சாரம் என்று.

No comments: